சித்தத்தின் உள்ளே சிறக்கின்ற நூல்களில்
உத்தமம் ஆகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே. 84.
1 சித்தத்தின் உள்ளே பெருகித் தோன்றும் 'இழை நூல்களிலும்'
2 'முதன்மையாகக்' கூறப்பட்ட 'தொகுப்பாகிய (ஆழ்மனத்தினைப்)' (subconscious)
3 பொருந்துகின்ற இந்தப் (பௌதிக) உடலையும்
உள் (அடக்கி ஊடுருவி) நின்ற தோற்றமாகிய (சூக்கும உடலாகிய மனமானது)
4 இறைவன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே.
மனச்சத்தினுள்ளே இழை நூல் தொகுப்புகள் பல பெருகித் தோன்றுவனவாம். அவை பலவற்றிலும் ஆழ்மனமாகிய தொகுப்பே முதன்மையாகக் கூறப்பட்டதாம். ஏனெனின், ஆழ்மனமே முதலில் நம்மால் எதிரிட்டு முன்னிலையாக அறியப்படும் தொகுப்பாம். இந்த ஆழ்மனத்தில் அடங்கியுள்ள எண்ணங்களின் இயற்கைச் சக்தியை ஒத்தே, நம்முடைய பௌதிக உடல் நமக்கு வந்துப் பொருந்தியமைவதாம். இக்கருத்துக்களையே இத்திருமந்திரத்தின் முதல் இரண்டு வரிகளில் திருமூலர் கூறியருளியிருக்கின்றார்.
எல்லா உயிர்களுக்கும் இறைவன் சூக்குமமாகிய மனத்தினை அளித்திருக்கின்றான் எனினும், அவர்கள் அனைவரும் பொதுவாகத், தத்தம் பௌதிக உடலின் ஓர் அங்கமே ஆன மூளையிலே சிந்திப்பதாகவே உணர்ந்து வாழ்ந்த வண்ணமிருக்கின்றனர். ஆனால், திருமூலரோ, தன் பௌதிக உடலை உள்ளடக்கி ஊடுருவி நிற்பதாகிய மனமாகத், தன்னைத் தான் உணரத் துவங்கிய அனுபவத்தைத், தான் இறைவன் அருளாலேயே பெற்று இலகியதாக, இத்திருமந்திரத்தில் கூறியருளியுள்ளார். அதாவது, இறைவன் அருளாலேயே ஒருவர் தன்னைத் தன்னுடையப் பௌதிக உடலை உள்ளடக்கி ஊடுருவி நிற்பதாகிய மனமாக உணரத் துவங்குகிறார், என்பதாம். இத்தகைய அனுபவத்தையே 'தொம்பைக்கூடு' போன்றது இம்மனம், என்று திருமந்திரத்தைத் தழுவித் திருவாசகத்திற்குத் தாம் எழுதிய உரையில், சிவயோகி திரு இரத்தின சபாபதிப் பிள்ளையவர்கள் குறிப்பிட்டிருப்பது இங்கு கூர்ந்து நோக்கத்தக்கது.
இறைவன் அருளால் தன்னுடையப் பௌதிக உடலை உள்ளடக்கி ஊடுருவி நிற்கும் மனமாகத் தன்னை உணரத் துவங்கும் அக விழிப்பினைப் பெறுவதற்கே பௌதிக உடல் வந்தமைந்திருப்பதாம்.
Mind-stuff-of within welling-up threads-among
first as(!) stated woven-aggregate of subconscious-to
merging body-even within-(encompassing and permeating)-abided rising
Lord me-to here Grace-by granted(!)
Our physical body (at the time of a fresh birth)
merges into the woven-aggregate of our subconscious (from the past births)
which is stated as the first among the threads welling up within our mind-stuff.
The rising (of the subtle body) that abided
encompassing within itself and permeating even such a physical body,
the Lord granted to me here by His Grace.
உத்தமம் ஆகவே ஓதிய வேதத்தின்
ஒத்த உடலையும் உள்நின்ற உற்பத்தி
அத்தன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே. 84.
1 சித்தத்தின் உள்ளே பெருகித் தோன்றும் 'இழை நூல்களிலும்'
2 'முதன்மையாகக்' கூறப்பட்ட 'தொகுப்பாகிய (ஆழ்மனத்தினைப்)' (subconscious)
3 பொருந்துகின்ற இந்தப் (பௌதிக) உடலையும்
உள் (அடக்கி ஊடுருவி) நின்ற தோற்றமாகிய (சூக்கும உடலாகிய மனமானது)
4 இறைவன் எனக்கு இங்கு அருளால் அளித்ததே.
மனச்சத்தினுள்ளே இழை நூல் தொகுப்புகள் பல பெருகித் தோன்றுவனவாம். அவை பலவற்றிலும் ஆழ்மனமாகிய தொகுப்பே முதன்மையாகக் கூறப்பட்டதாம். ஏனெனின், ஆழ்மனமே முதலில் நம்மால் எதிரிட்டு முன்னிலையாக அறியப்படும் தொகுப்பாம். இந்த ஆழ்மனத்தில் அடங்கியுள்ள எண்ணங்களின் இயற்கைச் சக்தியை ஒத்தே, நம்முடைய பௌதிக உடல் நமக்கு வந்துப் பொருந்தியமைவதாம். இக்கருத்துக்களையே இத்திருமந்திரத்தின் முதல் இரண்டு வரிகளில் திருமூலர் கூறியருளியிருக்கின்றார்.
எல்லா உயிர்களுக்கும் இறைவன் சூக்குமமாகிய மனத்தினை அளித்திருக்கின்றான் எனினும், அவர்கள் அனைவரும் பொதுவாகத், தத்தம் பௌதிக உடலின் ஓர் அங்கமே ஆன மூளையிலே சிந்திப்பதாகவே உணர்ந்து வாழ்ந்த வண்ணமிருக்கின்றனர். ஆனால், திருமூலரோ, தன் பௌதிக உடலை உள்ளடக்கி ஊடுருவி நிற்பதாகிய மனமாகத், தன்னைத் தான் உணரத் துவங்கிய அனுபவத்தைத், தான் இறைவன் அருளாலேயே பெற்று இலகியதாக, இத்திருமந்திரத்தில் கூறியருளியுள்ளார். அதாவது, இறைவன் அருளாலேயே ஒருவர் தன்னைத் தன்னுடையப் பௌதிக உடலை உள்ளடக்கி ஊடுருவி நிற்பதாகிய மனமாக உணரத் துவங்குகிறார், என்பதாம். இத்தகைய அனுபவத்தையே 'தொம்பைக்கூடு' போன்றது இம்மனம், என்று திருமந்திரத்தைத் தழுவித் திருவாசகத்திற்குத் தாம் எழுதிய உரையில், சிவயோகி திரு இரத்தின சபாபதிப் பிள்ளையவர்கள் குறிப்பிட்டிருப்பது இங்கு கூர்ந்து நோக்கத்தக்கது.
இறைவன் அருளால் தன்னுடையப் பௌதிக உடலை உள்ளடக்கி ஊடுருவி நிற்கும் மனமாகத் தன்னை உணரத் துவங்கும் அக விழிப்பினைப் பெறுவதற்கே பௌதிக உடல் வந்தமைந்திருப்பதாம்.
Mind-stuff-of within welling-up threads-among
first as(!) stated woven-aggregate of subconscious-to
merging body-even within-(encompassing and permeating)-abided rising
Lord me-to here Grace-by granted(!)
Our physical body (at the time of a fresh birth)
merges into the woven-aggregate of our subconscious (from the past births)
which is stated as the first among the threads welling up within our mind-stuff.
The rising (of the subtle body) that abided
encompassing within itself and permeating even such a physical body,
the Lord granted to me here by His Grace.
No comments:
Post a Comment